முத்துக்குமார் சிலை வைக்க அனுமதி மறுப்பு! வீரவணக்கக் கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும்!

Sunday, May 16, 2010

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூறும் விதமாக, மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சிலை திறக்க முடிவெடுத்தது அனைவரும் அறிந்ததே.
இன்று(16.05.2010) அன்று சிலை திறப்புக்கு நாள் குறித்து, அதற்கான விரிவான பரப்புரைகளை இளந்தமிழர் இயக்கமும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், மாவீரன் முத்துக்குமாரின் சிலையை நிறுவ காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மாணவர்கள் இளைஞர்கள் சுடரேந்தி வரும் ஊர்வேலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகமெங்குமிருந்து தஞ்சை வந்து கொண்டிருக்கும் உணர்வாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவும், சிலையை நிறுவுவதை தடுப்பதிலும் காவல் துறையினர் ”மிகுந்த” அக்கறைகாட்டி வருகின்றனர்.
எனினும், திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுவர் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம்

0 கருத்துகள்: