சென்னையில் உள்ள உணர்வாளர்களுக்கு அவசர வேண்டுகோள்!

Saturday, April 24, 2010


மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப அவ்வரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டாம் என்பதை வலியுறுத்தி, சென்னையில் உள்ள மலேசியத் தூதரகத்திடம் மனு கொடுக்க, இன்று காலை 11.30 மணியளவில் செல்லவுள்ளோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், உள்ளிட்ட தமிழ் அமைப்புத் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள முன் வந்துள்ளனர்.

சென்னையில் உள்ள உணர்வாளர்கள் லயோலா கல்லூரிக்கு எதிரில் அமைந்துள்ள மலேசியத் தூதரகம் முன்பு, முன்கூட்டியே வந்திருந்து அம்மனுவில் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
க.அருணபாரதி,

ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்

பேச: 9841949462

0 கருத்துகள்: