பரப்புரை துண்டறிக்கைகள் : உணர்வாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்

Thursday, April 30, 2009

ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு ஆயுத, ஆள், பண உதவிகளை செய்த இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியை தமிழகத்திலிருந்தே விரட்டும் நோக்கில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு உணர்வுள்ளத் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகி்ன்றது.


எமது இயக்கத் தோழர்களுக்கு காங்கிரஸ் குண்டர்களும், காவல்துறையினரும் ஏற்படுத்தி வரும் தடைகளைக் கடந்து நடந்து வரும் பிரச்சாரத்தின் போது கொடுக்கப்பட்டு வரும் துண்டறிக்கைகள் இப்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. இத்துண்டறிக்கையை தமிழ் உணர்வாளர்கள் அவரவர் பகுதியில் நகலெடுத்தோ, அச்சிட்டோ கொடுத்து தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டுகிறோம். இத்துண்டறிக்கைகளை பெருமளவில் அச்சிட்டுக் கொடுத்து உதவ எண்ணமுள்ள அன்பர்கள் விரைவில் எம்மை தொடர்பு கொள்ளவும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.








Read more...

இளந்தமிழர் இயக்கத்தின் துண்டறிக்கை பற்றி ”தினமலர்” மீண்டும் விசமப் பிரச்சாரம்

Monday, April 27, 2009

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசிற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு உதவி வருகின்றது. இதனை கண்டித்தும் தமிழினத் துரோகக் காங்கிரஸ் கட்சியை தமிழிகத்திலிருந்து விரட்டும் நோக்கிலோம் வருகின்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரசுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது.

மாவீரன் முத்துக்குமாரை யாரென்று ஏளனம் செய்த தமிழினத் துரோகி ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கண்டிக்கும் வகையில் ஈரோட்டில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்படாகி அதற்கான துண்டறிக்கை மக்களிடம் கொடுக்கப்பட்டது. அத்துண்டறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இத்துண்டறிக்கையையும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள
துண்டறிக்கையையும் இணைத்து ”தினமலர்” ஆட்காட்டி உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி பின்வருமாறு கூறுகிறது :

இளங்கோவனை கிண்டல் செய்து பிரசுரம் : தமிழ் அமைப்புகள் செயலால் காங்., எரிச்சல்
தினமலர், ஏப்ரல் 25,2009,20:31 IST

ஈரோடு : இளங்கோவனைக் கேலி செய்து 'பயோ-டேட்டா' வடிவில் ஈரோடு முழுவதும் வினியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள் காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மதுபாட்டிலுடன் நடனமாடுவது போல் கேலிச்சித்திரம் வரைந்து, ஈரோடு முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.'கருணாநிதியின் 'டாஸ்மாக்'கும்; குடிப்பழக்கத்தால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஞாபகமறதியும்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுப் பிரசுரத்தில் உள்ள பயோ-டேட்டா வருமாறு:

பெயர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
ஊர்: பிறப்பால் கன்னடன்; பிழைப்பது தமிழகத்தில்.
பதவி: மத்திய மந்திரி.
தொழில்: குடிப்பழக்கத்தால் மறந்துவிட்டது.
பிடிக்காதது: தமிழர்கள்.
பிடித்தது: எல்லா வகை மதுபானங்களும்.
மறந்தது: தோழர் முத்துக்குமாரின் தியாகம்.
மறக்காதது: தமிழர்களுக்குத் துரோகம்.
சொத்து: சோனியாவின் செருப்பு.
கோபப்படுவது: கருணாநிதியின் நடிப்பு.
பொழுதுபோக்கு: உட்கட்சி மோதல்; சுவரொட்டிகள் கிழிப்பது.
பட்டப்பெயர்: தமிழனத் துரோகி.
சாதித்தது: ஈரோட்டில் 'சீட்' வாங்கியது.
எதிர்பார்ப்பது: மீண்டும் பதவி.
நடக்கவிருப்பது: 'டிபாசிட்' இழப்பு.

தமிழக மக்களே... 'காங்கிரசை ஒழிப்பதே என் முதல்பணி' என முழங்கிய பெரியார் பிறந்த மண்ணில் வாழும் ஈரோடு வாழ் மக்களே... உங்கள் ஓட்டுக்களை இளங்கோவனுக்கு வாய்க்கரிசியாய் மாற்றுங்கள்!இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 'சாணிப்பால் தெளித்து பழைய செருப்பால் அடிக்கும் முகாம்' என்ற தலைப்பில், 'இளந்தமிழர் இயக்கம்' சார்பில் வினியோகிக்கப்பட்டுள்ள மற்றொரு துண்டுப் பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:வழிப்பறி செய்தல், கொள்ளையடித்தல், கன்னம் வைத்து திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோரை தமிழர்கள் கழுதை மேல் உட்காரவைத்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி பழைய செருப்பால் அடித்து ஊர்வலம் விடுவது வழக்கம்.அன்று தமிழ் மக்களுக்குப் பல்வேறு இடையூறு செய்த கன்னட சாளுக்கிய மன்னன் மீது, ராஜராஜ சோழன் படை எடுத்து, மராட்டியம் வரை துரத்தி அடித்தான்.தமிழக மீனவர்களுக்காகவும், தமிழீழ மக்களுக்காகவும் உயிர்த்தியாகம் செய்த, 'தோழர் முத்துக்குமாரை' - அவன் யார் என்று கேட்ட கன்னடன் இளங்கோவன் தமிழினத்துக்கே துரோகம் செய்கிறான்.'முத்துக்குமார் யார்?' எனத் தெரியாத இளங்கோவனுக்கும், மற்றவர்களுக்கும் நினைவுத்திறன் வளர, மறக்காமல் இருக்க சாணிப்பால் தெளித்து, செருப்பால் அடிக்கும் முகாம், ஈரோட்டில் ஏப்., 25 மாலை 5 மணிக்கு பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெறும். குறிப்பு: தமிழர்கள் பழைய செருப்புகளை பத்திரமாக வைத்திருந்து முகாம் நடைபெறும் நாளில் அதை கொண்டு வரவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுபோல், பல்வேறு நோட்டீஸ்கள் அச்சிடப்பட்டு நகர் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், காங்கிரசார் எரிச்சலடைந்துள்ளனர். 'இருக்கிற தலைவலி போதாதென்று இதுவேறயா' என போலீசாரும் புலம்பி வருகின்றனர்

இணைப்புப
தினமலர் இணையதளச் செய்தி :

Read more...

மாவீரன் முத்துக்குமாருக்கு மணிமண்டபம் : உலகத்தமிழர்களுக்கு முத்துக்குமார் தந்தை கடிதம்

Saturday, April 4, 2009

:  மாவீரன் முத்துக்குமாருக்கு நினைவு மண்டபம் :
உலகத் தமிழர்களுக்கு முத்துக்குமாரின் தந்தை கடிதம்
 
சென்னை- 17, 4.04.09.

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனவெறிப் போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தீக்குளித்து ஈன்னுயிர் நீத்த மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் நினைவு மண்டபம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ட உள்ளன.

ஈழத்தமிழர்களின் இன்னல்களை விளக்கியும், "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம்" என்று 1 இலட்சம் கையெழுத்துகளை திரட்டியும் "தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்" என்ற பெயரில் இளந்நதமிழர் இயக்கம் சார்பில் கடந்த 25.02.09 தொடங்கி 0.6.03.09 வரை தமிழ்நாடு முழுக்க பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயணத்தின் முடிவில் சேலத்தில் 6.03.09 அன்று நடந்த "இன எழுச்சி மாநாட்டில்" மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பிற்கு முத்துக்குமாரின் தந்தை குமரேசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு.த.வெள்ளையன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பழ.நெடுமாறன்  ஆகியோரை சந்தித்து இளந்தமிழர் இயக்கம் ஆதரவு திரட்டியது. அவர்களும் இம்முயற்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தருவதாக உறுதியளித்துள்ளனர்.
 
இது குறித்து உலகத் தமிழர்களுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தை ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 
தமிழர்களுக்கு வணக்கம். எனது மகன் முக்குமார், வீரத்தமிழ்மகன் மாவீரன் என்ற உயர்ந்த தகுதியை அடைந்திருப்பதில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் இனத்திற்காக அவன் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டது அவனது இழப்பையும் கடந்த பெருமிதத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது.
 
தேர்தல், சாதி அரசியலைத் தவிரி்த்து, புரட்சிகர மாற்று அரசியலை தமிழக இளைஞர்களும், மாணவர்களும் முன்னெடுக்க வேண்டும் என்பது முத்துக்குமாரின் இறுதிக் கடித வேண்டுகோள். இந்த வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்று இளந்தமிழர் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மார்ச் 6மு் தேதி சேலத்தில் நடத்திய "இன எழுச்சி மாநாட்டில்" "வீரத்தமிழ் மகன் மாவீரன் முத்துக்குமாருக்கு நினைவு மண்டபம் எழுப்புவோம்" என்ற தீர்மானத்தை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் செயலாகும்.
 
இளந்தமிழர் இயக்கத்தினர் முத்துக்குமாருக்கான நினைவு மண்டப அடிப்படைப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அவர்களது முன்முயறச்சியில் எங்கள் குடுமத்தினருக்கு முழு சம்மதம் உள்ளது. இந்த நினைவு மண்டபம் தமிழர் வரலாற்றில் அழியாப் பணிகளை மேற்கொள்ளும் அறிவு மையமாகச் செயல்படும் என்று இளந்தமிழர் இயக்கத்தினர் உறுதி தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த சமூகமும் இந்த முயற்சியில் கைகோர்த்துச் செயல்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
 
நாள்  04.04.09.
இடம்  திருச்சிராப்பள்ளி
 
                                                                                                   அன்புடன்,
                                                                                                   S.குமரேசன்
 
 
இவ்வாறு அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முத்துக்ககுமாரின் தந்தை வெளியிட்ட கடிதத்திற்கு ஏற்ப , விரைவில் மணி மண்டபம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும்.
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.
 
(குறிப்பு : முத்துக்குமார் தந்தையின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)

Read more...