ஈழத்தமிழர் ஆதரவு : மாணவர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை : இளந்தமிழர் இயக்கம் கணடனம்

Friday, March 20, 2009

ஈழத்தமிழர் ஆதரவு : கடலூர் அரசுக் கல்லூரி
மாணவர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை
இளந்தமிழர் இயக்கம் கணடனம்

 சென்னை, 20.
 
ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனவெறிப் போரை இந்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் பள்ளி, கல்லூரி மாணவர்களும் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள்  30 சனவரி அன்று முதல் காலவரையற்ற உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தற்பொழுது அப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அக்கல்லூரி முதல்வர் சந்திரிகா பெற்றோர்களை அழைத்து வருமாறுக் கூறியும், சில மாணவர்களை வகுப்புக்கு செல்ல அனுமதி மறுத்தும்  பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கல்லூரி முதல்வரின் இந்நடவடிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது.
 
மேலும், அரசு தான் இவ்வாறு செய்யக்கூறுகிறது என்று அம்முதல்வர் கூறுவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது அரசின் முடிவா அல்லது அக்கல்லூரி முதல்வரின தனிப்பட்ட முடிவா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
 
கல்லூரி நிர்வாகம், மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்து அவர்களது கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அம்மாணவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் நல்லதுரை மேற்கொண்டு வருகின்றார். 
 
தோழமையுடன்,
க.அருணபாரதி,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.

0 கருத்துகள்: